தரங்கம்பாடி, ஜூலை15: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உர தொகுப்பு பெறலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. செம்பனார்கோவில் வட்டாரத்தில் பொறையார், திருவிளையாட்டம், ஆக்கூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் முதலமைச்சரின் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உரதொகுப்பு மற்றும் மானியங்களின் விதைகளை உரிய சிட்டா அடங்கல், ஆவணங்களுடன் அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்து பெற்றுக்கொள்ளலாம் என்று செம்பனார்கோவில் உதவி இயக்குனர் சுப்பையன் கூறியுள்ளார்.