வேதாரண்யம், ஜூலை 15: வேதாரண்யம் அடுத்த செம்போடையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு குடும்பத் தலைவிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை கோட்டாட்சியர் மதியழகன் துவக்கி வைத்தார். வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன் கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில வேதாரண்யம் இல்லம் தேடி கல்வி வேதாரண்யம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அரசமணி மற்றும் தலைஞாயிறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். பயிற்சியில் 200 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.