வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை பனங்காட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம், அவரது மகன் ஜீவன்ஸ் ஆகிய 2 பேர் பைபர் படகில் கடந்த 19ம் தேதி மீன் பிடிக்க சென்றனர். ஆறுகாட்டுத்துறை அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பைபர் படகில் வந்த இலங்கையை சேர்ந்த தமிழ் பேசிய 5 பேர்களில், 4 பேர் படகில் ஏறி, 2 மீனவர்களை தாக்கிஜிபிஎஸ், செல்போன்கள், லைட் உட்பட மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். இதேபோல் ஆறுகாட்டுத்துறை சங்கர்(48), குமார்(60), தேத்தாக்குடி கார்த்திகேயன்(65) ஆகிய 3 பேரும் நள்ளிரவு அதே பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை தாக்கி பொருள்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர். மேலும் ஆறுகாட்டுத்துறை ரமேஷ்(38), நல்லதம்பி(41), காளிதாஸ்(40), அருள்செல்வன்(42) ஆகிய 4 பேரும் நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கையை சேர்ந்த 5 பேர், படகில் ஏறி 4 மீனவர்களை கட்டையால் தாக்கி பேட்டரிகள், போன், 25 கிலோ வாளை மீன் வலையையும் பறித்து சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது….