தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் அருகே கல்லணை கால்வாய் ஆற்றில் மன்னர் கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது பெரியகோயில் கோட்டை சுவரில் இருந்து விழுந்ததா அல்லது வேறு சிலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்ேதாறும் தஞ்சாவூர் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பெரிய கோயிலின் அழகை ரசித்து செல்கின்றனர்.