குமாரபுரம், டிச. 14: தக்கலை அருகே மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையில் போலீசார் குமாரகோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டெம்போவை பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையம் ெகாண்டு வந்தனர். மேலும் டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.