திங்கள்சந்தை, டிச.14: இரணியல் அருகே முதியோர் இல்லம் கட்டும் பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரணியல் சாய்நகரை சேர்ந்தவர் கஸ்தூரிபாய். அறக்கட்டளை நடத்தி வருகிறார். தோட்டியோடு மௌனகுருசாமி கோவில் அருகில் முதியோர் இல்லம் கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று கஸ்தூரிபாய் கட்டுமானம் நடந்து வரும் இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்தது 31/2 கட்டு இரும்பு கம்பிகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது பரசேரியை சேர்ந்த ரமேஷ் 2 பேருடன் சேர்ந்து கம்பிகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கஸ்தூரிபாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ரமேஷ் உட்பட 3 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே கட்டுமான கம்பிகள் திருட்டு 3 பேர் மீது வழக்கு
previous post