பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தொற்று விழிப்புணர்வு குறித்து வீடு வீடாக பிரசாரம் செய்யப்பட்டது. பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வேந்தன்பட்டி ஊராட்சியில் உள்ள வேந்தன்பட்டி இடையபுதூர் ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் தலைமையில் வீடு வீடாகச் சென்று தொற்றுகள் குறித்தும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டெங்கு முன்தடுப்பு சர்வே எடுக்கப்பட்டது….