சேந்தமங்கலம், ஏப்.10: தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், கொல்லிமலையில் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குமரவேலு முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜமால் முகமது கூட்டத்தில் தீர்மானங்களை படித்தார். முன்னதாக மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் ராசிபுரம் இருசக்கர வாகனம் மெக்கானிக்குகள் சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவது, சங்கத்தின் கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைப்பது, அதில் கிடைக்கும் பயன்களை சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பயனடைவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்
previous post