ஜெயங்கொண்டம், ஏப்.6:அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மகன் பாரதிராஜா (42). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பல பெண்களிடம் பழக்கம் இருப்பதாகவும் பெண்களுடன் தனியே இருக்கும்போது போட்டோ வீடியோக்களை எடுத்துக்கொண்டு பெண்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதில் சில பெண்களுக்கும் பாரதிராஜாவுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அவர் வைத்திருந்த செல்போன்களை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாரதிராஜாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.