டெல்லி : இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு டோஸ்களை கொள்முதல் செய்வது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து தடுப்பூசி மூலம் மக்களை பாதுகாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒத்திகைகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், 2021ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி எவ்வளவு டோஸ்களை வாங்குவது என்ற ஆலோசனை தீவிரம் அடைந்து வருகிறது. ஒருவருக்கு 2 டோஸ் வீதம் 60 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது விவரங்களை கணக்கில் கொண்டு, 66.6 கோடி டோஸ்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம், உலக நோய் தடுப்புத் திட்ட பரிந்துரையின் படி, 10% வேஸ்டேஜ்ஜையும் கொள்முதல் கணக்கில் சேர்த்து கொள்ளுமாறு, அறிவுறுத்தி உள்ளது….