அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர், ராம் நகர் அருகே பத்மாவதி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குமரகுரு (55). இவருக்கு மனைவி லலிதா (48) மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்த குமரகுரு, அங்கு சேமித்த பணத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு திரும்பினார். பின்னர், தான் சம்பாதித்த பணத்தில் அம்பத்தூரிலேயே சொந்த வீடு வாங்க வேண்டும் என குமரகுரு ஆசைப்பட்டார். அதற்கு மனைவி லலிதா, சொந்த வீடெல்லாம் வேண்டாம். 2 மகள்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என கூறி வந்துள்ளார். இதில் குமரகுரு கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்றிரவு படுக்கையறையில் தூங்க சென்ற குமரகுரு, இன்று காலை 8 மணிக்கு மேலாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த மனைவி லலிதாவும் 2 மகள்களும் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குமரகுரு உடலில் காப்பர் வயரை சுற்றிக்கொண்டு, அதை மின் இணைப்பில் பொருத்தி தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார், குமரகுருவின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….
சொந்த வீடு ஆசைக்கு மனைவி தடை: உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை
previous post