Thursday, May 16, 2024
Home » சைக்கோ கொலையாளியை கைது செய்த மாவட்ட எஸ்பி, போலீசாருக்கு நன்றி தெரிவித்த கல்லுவழி கிராமத்தினர்

சைக்கோ கொலையாளியை கைது செய்த மாவட்ட எஸ்பி, போலீசாருக்கு நன்றி தெரிவித்த கல்லுவழி கிராமத்தினர்

by Ranjith

சிவகங்கை, மார்ச். 2: காளையார்கோவில் அருகே குடும்பத்தினரை தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்வபத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசார் மற்றும் எஸ்பிக்கு கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர். காளையார்கோவில் அருகே கல்லுவழி கிராமத்தில் கடந்த 25.01.2024அன்று நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் மற்றும் இவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகைகளைகொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக காளையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இச்சம்பவத்திற்காக சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய்சவுந்தர்யன் தலைமமேற்பார்வையில் 8தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட தேவகோட்டை அருகே தென்னீர்வயல் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரை(33) போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்துச்சென்ற நகை, பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும் கடந்த 13.07.2020ல் இதே கிராமத்திற்கு அருகில் உள்ள முடுக்கூரணி என்ற கிராமத்தில் நடந்த இரட்டை கொலை செய்து கொள்ளையடித்தது, 10.01.2023அன்று தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை செய்து கொள்ளையடித்தது ஆகிய சம்பவங்களிலும் தினேஷ்குமார் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த எஸ்பி அர்விந்த் மற்றும் தனிப்படை போலீசாருக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் கல்லுவழி மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

six + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi