சேலம்: சேலம் மாநகராட்சி பொறியாளர் அசோகன் வங்கி லாக்கரில் இருந்து ரூ.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமாகத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லாக்கரை திறந்து சோதனை நடத்தினர். பொறியாளர் அசோகன் அவருடைய மனைவி பரிவாதினி, தாய் ஆகியோர் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அசோகன் வீட்டில் ஏற்கனவே நடந்த சோதனையின் போது நகர கூட்டுறவு வங்கியின் லாக்கருக்கான சாவி ஒன்று கிடைத்தது. …