சென்னை: சென்னை சூளைமேட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பழனிக்குமார் வீட்டின் முன் இளைஞர் தீக்குளித்துள்ளார். பழனிகுமாருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பாலகிருஷ்ணன் தீக்குளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் பாலகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழனிகுமாரை சூளைமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பழனிவேல் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. …