சீர்காழி,மே 8: சீர்காழி அருகே கழுமலையார் தூர்வாரும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டலிலிருந்து சீர்காழி நகர் வழியாக செல்லும் கழுமலையார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.22 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியை மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு பணியைதரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் கனகசரவண செல்வன், ஊராட்சி தலைவர் விஜயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.