Friday, May 31, 2024
Home » சிவகாசியில் கிரிக்கெட், கால்பந்து பயிற்சி மைதானம் துவக்கம்

சிவகாசியில் கிரிக்கெட், கால்பந்து பயிற்சி மைதானம் துவக்கம்

by Ranjith

 

சிவகாசி, நவ.25: சிவகாசி அரசன் குழுமம் சார்பில் டர்ப் கோர்ட் என்ற பெயரில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி மைதானம் துவங்கப்பட்டுள்ளது. சிவகாசி எம்எல்ஏ அரசன் அசோகன் மைதானத்தை திறந்து வைத்தார். அரசன் பயிற்சி மைதான நிர்வாக இயக்குனர்கள் அரசன் கார்த்தி, அரசன் ஷியாம் சுந்தர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைதானம் 8,025 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் விளையாடும் வகையில் மைதானத்தில் நல்ல காற்றோட்ட வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டார். காளீஸ்வரி நிறுவன நிர்வாக இயக்குனர் செல்வ சண்முகம், அணில் ஃபயர் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் பாலாஜி, சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் மற்றும் முக்கிய தொழில் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி மைதானத்தில் இரவிலும் விளையாடும் வகையில் மின்னொளி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தில் விளையாட 99436 48882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மேலாளர் வீரபாண்டியன் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi