Wednesday, May 22, 2024
Home » சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு காட்பாடி அருகே

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு காட்பாடி அருகே

by Karthik Yash

வேலூர், டிச.1: காட்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவருக்கும் காட்பாடி அருகே சிங்காரெட்டியூரைச் சேர்ந்த அஜீத்(25) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் 15ம்தேதி திருமணம் நடந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் 13 வயதுள்ள சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததாக கே.வி.குப்பம் சமூக நல அலுவலர் சித்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சித்ரா நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து சித்ரா காட்பாடி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த அஜீத் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

17 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi