Thursday, May 9, 2024
Home » சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

by Karthik Yash

நெல்லை, பிப்.28: களக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17ம் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் என்ற பாவாடை மணி (21) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் சிறுமியை மணிகண்டன் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. இதனால் போலீசார் மணிகண்டன் மீது, சிறுகுழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு மணிகண்டன் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

twenty − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi