நெல்லை, ஏப்.15: நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி வட்டகுளத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பொன்ராஜ்(18). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதியன்று ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சிறுமி தற்போது 2 மாத கர்ப்பிணியாக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த களக்காடு யூனியன் விரிவாக்க அலுவலர் பொன்விஜயராணி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் பொன்ராஜ் மீது குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.