திண்டுக்கல், ஏப். 7: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்தவர் அம்சராஜன் (55). இவர் கடந்த 2019ம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் ஒட்டன்சத்திரம் போலீசார் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அம்சராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கருணாநிதி தீர்ப்பு வழங்கினார். இதில் அம்சராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டு சிறை திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு
previous post