நாகர்கோவில், மார்ச் 27 : குமரி மாவட்டம் வன்னியூர் அருகே உள்ள இளந்தோட்டத்துவிளைவீடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (58). கடந்த 2020 ம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்தார். இதில் செல்வராஜிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.