சின்னாளபட்டி: சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டி அரசு பள்ளி அருகே பெண்கள் கழிவறை உள்ளது. இந்த கழிப்பறை போதிய பராமரிப்பின்றியும், புதர் மண்டியும் பயனில்லாமல் கிடந்தது. இதுபோல் அருகேயுள்ள மாற்றுத்திறனாளி கழிவறையும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் புதர்மண்டி கிடந்த 2 கழிவறைகளிலும் தூய்மை பணி மேற்கொண்டு, தற்போது ‘பளிச்’ என ஆகியுள்ளது. பொதுக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுபோல் சேடபட்டி லட்சுமிபுரத்தில் புதர்மண்டி கிடக்கும் பொது கழிவறையையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …