Saturday, May 18, 2024
Home » சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்

by Ranjith

 

சேந்தமங்கலம், ஏப்.7: சேந்தமங்கலம் ஒன்றியம், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி மருங்கம்பட்டியில், ஒருவர் இறந்தார். அவரை போலீசார் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். அவர்கள் சடலத்தை ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்காக, நாமக்கல்லில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு பேசி வரச் சொல்லி இருந்தனர். அதன்படி, டிரைவர் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தத்தகிரி முருகன் கோவில் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.  இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று ஆம்புலன்சில் சிக்கிய டிரைவரை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாற்று ஆம்புலன்ஸ் மூலம், சடலத்தை உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

eighteen + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi