சாத்தான்குளம், ஏப்.3:சாத்தான்குளம் அருகே கருவேலம்பாட்டில் மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள வேலியில் நேற்று திடீரென தீப்பற்றியது. அப்போது வீசிய காற்றால் தோட்டத்தில் பயிரிட்டிருந்த பயிர்கள்மீது பரவும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து விரைந்துவந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி, சிறப்பு நிலைய அலுவலர் ஹேரீஸ் மற்றும் வீரர்கள் தவசிராஜ். சுரேஷ்குமார், மாரிமுத்து, முத்துமாணிக்கம், சீனிவாசன் உள்ளிட்டோர் தீயை அணைத்மேலும் பரவாமல் தடுத்தனர்.