சோமனூர், மே 30: சோமனூர் அடுத்த பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று பூமலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாய நலக்கூடம் அப்பகுதி மக்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டது. சமீப ஆண்டுகளாக இந்த சமுதாய நலக்கூடம் ஊராட்சி மன்றத்தால் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாத காரணத்தால் இந்த கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.