சமயபுரம், மார்ச் 9: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரியடிலோமின்தாஸ் (26). ஐடிஐ முடித்த இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். லால்குடி அருகே மகிழம்பாடி பகுதியைச் சேர்ந்த சுசீலாமேரி (23). இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று காலை மரியடிலோமின்தாஸ், சுசீலாமேரி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு, சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருவரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.