Thursday, May 16, 2024
Home » சட்டமன்ற தேர்தலுக்கான திமுக அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 42 அறிவிப்புகள்

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக அறிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 42 அறிவிப்புகள்

by kannappan

* திருவள்ளூரில் மாம்பழக்கூழ், ஜவ்வரிசி தொழிற்சாலை * கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா * மீஞ்சூர், பொன்னேரியில் புறவழிச் சாலை * திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை சென்னை: திருவள்ளூர் மாவட்டத்திற்கான திட்டங்கள் தொடர்பாக 42 அறிவிப்புகள் கொண்ட தேர்தல்  அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிக்கையில்  கூறியிருப்பதாவது:* திருவள்ளூர், திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர், ஆவடி, கவரப்பேட்டை, பூந்தமல்லியில், நசரத்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.* திருவேற்காடு நகரத்தில் காடுவெட்டி மற்றும் திருவேற்காடு பகுதியை இணைப்பதற்கு கூவம் ஆற்றின் நடுவில் மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் காமராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும்.* மீஞ்சூர், பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.* திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும்.* பொன்னேரியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும்.* சின்னம்மாபேட்டை கால்வாயிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருவேலங்காடு வேதாரண்யேஸ்வரர் கோயில் திருக்குளம் நிரப்பப்படும்.* பட்டறை பெருமாந்தூர், அல்லிக்குழி ஊராட்சிகளில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.* திருவாலங்காட்டில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* கடம்பத்தூரில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.* கும்மிடிப்பூண்டியில் ஜவுளிபூங்கா அமைக்கப்படும்.* பள்ளிப்பட்டில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.* பூந்தமல்லி மற்றும் புட்லூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.* பூந்தமல்லிக்கு வெளியே குப்பை கிடங்கு அமைக்கப்படும். * கும்மிடிப்பூண்டியில் உள்ள குப்பை கிடங்கு ஊருக்கு வெளியே அமைக்கப்படும்.* மெட்ரோ ரயில் சேவை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராமுக்கு விரிவுபடுத்தப்படுவதோடு,  திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர் வழியாக   கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.* பொன்னையாறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.* திருத்தணியில் ஜவுளிபூங்கா அமைக்கப்படும்.* திருத்தணி, பள்ளிப்பட்டில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படும்.* க.மு.பேட்டையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்படும்.* மப்பேடு ஊராட்சியில் சென்னை உலா துறைமுகம் அமைக்கப்படும்.* திருவள்ளூர், பள்ளிப்பட்டு, அரக்கோணத்தில் சுற்று சாலைகள் அமைக்கப்படும்.* திருவள்ளூர் பேருந்து நிலையம் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கட்டப்படும்.* கதிர்வேடு, சோழவரம் ஒன்றியம் மற்றும் கொடுவேலி மாராட்சி கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும்.* ஆவடியில் தகவல் தொழிட்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.* திருவள்ளூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* ஆவடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும்.* திருவள்ளூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை, ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கப்படும்.* செம்பரம்பாக்கம், பூந்தமல்லி – வெள்ளவேடு மற்றும் ஆரணியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.* ஆரணியில் மாணவிகளுக்கு தனியாக அரசு விடுதி கட்டப்படும்.* திருமழிசை, பொன்னேரி அரசு மருத்துவமனைகள் நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமளைகளாக தரம் உயர்த்தப்படும்.* விடியங்காடு ஊராட்சியிலும், நல்லூர் பஞ்சாயத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.* கும்மிடிப்பூண்டியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.* ஸ்ரீபெரும்புதூர், கோத்தாப்பேட்டையில் நவீன அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.* திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைத்துத்தரப்படும்.* செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஊர் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.* பெருங்காவூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தாம் உயர்த்தப்படும்.* பாலவேடு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.* கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.*  பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அருகில் சுற்றுலா தலம் அமைக்கப்படும்.* எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.* தண்டலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும்.இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi