குளச்சல், மார்ச் 6 : மணவாளக்குறிச்சி பேரூராட்சி சக்கப்பற்றில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் குட்டிராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லிபின்பாபு முன்னிலை வகித்தார். சால்வேஷன் ஆர்மி சர்ச் குருவையா சாம் டேவிட் ஜெபம் செய்தார். குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குருந்தன்கோடு வட்டார காங். தலைவர் கிறைஸ்ட் ஜெனித், சிமியோன், விமல் கிருஷ்ணன், ரகு, வைகுண்டமணி மற்றும் ஊர்மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சக்கப்பற்று நூலகத்திற்கு புதிய கட்டிடம்
previous post