Thursday, May 16, 2024
Home » க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்

க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்

by Ranjith

 

க.பரமத்தி, ஏப். 10: க.பரமத்தி அடுத்த முன்னூர் அருகே தூக்கு மாட்டி உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதியினர் கிராம நிர்வாக அலுவலருக்கும் க.பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். க.பரமத்தி அடுத்த முன்னூர் அருகே கிரஷர்மேடு பகுதி ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து க.பரமத்தி போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த க.பரமத்தி எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டு கொட்டகை வீட்டினுள் சென்று பார்த்த போது க.பரமத்தி அடுத்த முன்னூர் துரைசாமி மகன் ராஜா(56) என்பவர்)தூக்கு மாட்டி உடல் அழுகிய நிலையில் சடலமாக இருப்பதும் இவர் போதையில் அடிக்கடி வீட்டுக்கு வராமல் வெளியே சுற்றித் திரியும் பழக்கம் உடையவர்.

என்பதும் கடந்த பத்து நாட்களாக இவரை இவரது உறவினர்கள் தேடி வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.உடனே உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பிறகு இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi