Friday, May 17, 2024
Home » கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 லட்சம் வெளியூர் தொழிலாளர்கள் ஓட்டுபோட சொந்த ஊர் செல்ல தயார்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 லட்சம் வெளியூர் தொழிலாளர்கள் ஓட்டுபோட சொந்த ஊர் செல்ல தயார்

by MuthuKumar

கோவை, ஏப். 14: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 லட்சம் வெளியூர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போட சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி (சில பகுதிகள்), ஈரோடு பாராளுமன்ற ெதாகுதி இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் விசைத்தறி, பனியன் நிறுவனங்கள், ஆட்டோமொபைல்ஸ், சாயப்பட்டறை, பவுண்டரி, மில், கிரசர், பம்பு, வெட்கிரைண்டர் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த ெதாழிலாளர்கள் ேகாவையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்களும், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அதிகளவு வசிக்கின்றனர்.

சுமார் 3 லட்சம் வாக்காளர்கள், மேற்கண்ட 3 மாவட்டங்களில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் சொந்த ஊர் சென்று ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வெளியூர் வாக்காளர்கள், சொந்த ஊருக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அரசூர், கணியூர், நீலம்பூர், கருமத்தம்பட்டி, சோமனூர், அனுப்பர்பாளையம், பல்லடம், சூலூர் வட்டாரங்களில், தேர்தலை முன்னிட்டு கடந்த காலங்களில் தொழில்நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. குறிப்பாக, பனியன், விசைத்தறி நிறுவனங்கள் தேர்தல் நாளில் முழுமையாக அடைக்கப்படும் என தெரிவித்து, ஓட்டுபோட வாய்ப்பு வழங்கினர். தற்போதும், பாராளுமன்ற தேர்தலில் வெளியூர் வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல போதுமான வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வெளியூர் தொழிலாளர்கள் கோவையில் முகவரி மாற்றம் செய்திருந்தால் இங்ேக ஓட்டு போடலாம். எவ்வளவு பேர் வௌியூர் வாக்காளர்கள் என துல்லியமாக தெரியவில்லை. யாராக இருந்தாலும் ஓட்டுபோட செல்லவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஓட்டுரிமை உள்ளவர்கள் வெளியூர் செல்ல தயக்கம் காட்டக்கூடாது. ஓட்டுப்பதிவு நாளில் வெளியூர் தொழிலாளர்கள் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தங்கிவிட்டால், ஓட்டு சதவீதம் வெகுவாக குறைந்துவிடும். தொழில் நிறுவனங்களிலேயே தங்கி வேலைசெய்யும் ெதாழிலாளர்கள் வெளியூர் செல்வார்களா, தொழில் நிறுவனத்தினர் என்ன ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதை உறுதிசெய்ய வட்டார தேர்தல் அலுவலர்களுக்கு (பி.எல்.ஓ) உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் பிரிவு தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

18 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi