கோவை, ஏப்.14: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டனி சார்பாக திருப்பூரில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணி நிறைவடைந்தது. பின்னர் காரின் மூலம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் இரவு 9 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.