காரைக்கால்,ஜன.12: காரைக்காலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பத்து கோதண்டராமர் ஆலயத்தில் த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூலவர் தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், உற்சவர் கோதண்டராமர் மற்றும் த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது. இதில் பால், தயிர், மஞ்சள், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், திரவியப்பொடி மற்றும் பலவகை பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார்.
கோவில்பத்து பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
previous post