கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள நாலுவாசன்கோட்டையில், குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வேளாண்மை விழிப்புணர்வு களப்பணியில் ஈடுபட்டனர். விளைநிலங்கள் வீட்டுமனைகளாவதை தடுக்கவும், இளைஞர்களிடையே விவசாயம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், நெல் சாகுபடியில் தன்னிறைவு அடையவும், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைக்கும் வகையிலும் நாலுவாசன்கோட்டை பகுதி வயலில் நெல் நாற்று நடும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சுப்பாராஜு செய்திருந்தார். …