தர்மபுரி, ஜன.24: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமி கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சுவாமி கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை நந்திகேஸ்வரருக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மல்லிகார்ஜுனேஸ்வரர் கல்யாண காமாட்சி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.