பொகோடா: கொலம்பியா நாட்டின் தென்மேற்கு துறைமுக நகரமான டுமாகோவிற்கும், காலிக்கும் இடையில் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. பான் – அமெரிக்க நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை கூறுகையில், ‘பேருந்தின் பிரேக் சிஸ்டத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். சாலையின் வளைவான பகுதியில் அதிகளவில் பனிமூட்டம் இருந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்தது. விபத்தில் சிக்கியவர்களை 9 மணி நேரம் போராடி மீட்டோம்’ என்று தெரிவித்துள்ளது….