Wednesday, May 29, 2024
Home » கொரோனா பாதிப்பால் அரசு வழக்கறிஞர் மரணம்: நீதிபதிகள், வக்கீல்கள் அதிர்ச்சி

கொரோனா பாதிப்பால் அரசு வழக்கறிஞர் மரணம்: நீதிபதிகள், வக்கீல்கள் அதிர்ச்சி

by kannappan

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் தம்பிதுரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்குகளில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தம்பிதுரை, கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ரிட் வழக்குகள், நெடுஞ்சாலை துறை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான வழக்குகளில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் ஆஜராகிவந்தார்.அவரது மறைவுக்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் அர்விந்த் பாண்டியன், எஸ்.ஆர்.ராஜகோபால், சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.திருமாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வக்கீல் மரணம் குறித்து தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியிடம் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிச்சியடைந்த தலைமை நீதிபதி, கொரோனா ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்….

You may also like

Leave a Comment

twenty − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi