கேடிசி நகர், மார்ச் 16: ஊத்துமலை அருகே வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(35), டிரைவர். இவரது மனைவி தமிழருவி(27). கடந்த 13ம் தேதி இரவில் கொசுத் தொல்லையை தடுக்க கொசுவர்த்தி சுருளை ஏற்றியுள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ கட்டிலில் பிடித்ததில் மனைவியின் சேலையிலும் பற்றியது. தீ மளமளவென்று உடல் முழுவதும் பரவவே, அவரைக் காப்பாற்றி தீயை அணைக்கும் பணியில் கணவர் வெள்ளத்துரை ஈடுபட்டார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி தமிழருவியும், சிறிது நேரத்தில் வெள்ளத்துரையும் இறந்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு
previous post