செய்துங்கநல்லூர், அக். 11: வைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியில், வருகிற நவம்பர் மாதம் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதன் முன்னோடியாக மக்கள் தொடர்பு முன்னோடி முகாம் நடந்தது. பஞ். தலைவர் ஆபிதா அப்துல்சலாம் வரவேற்றார். வை. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஹபிபூர் ரகுமான் வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கொங்கராயக்குறிச்சி, ஆழ்வார்கற்குளம், மணக்கரை, ஆறாம்பண்ணை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 120க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது மக்கள் தொடர்பு முகாமில் உடனடி தீர்வு காணப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். முன்னோடி முகாமில் வருவாய் ஆய்வாளர் அமுதா தேவி, கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.