குளச்சல், மார்ச் 7 : குளச்சல் காந்தி சந்திப்பில் கேரள பேஷனின் புதிய நகை கடை திறப்பு விழா நடந்தது. குளச்சல் நகர வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழா விற்பனையை முன்னிட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உரிமையாளர் முருகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.