கடலூர் : கடலூர் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கபடி, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டு போட்டிகள் அனைத்தும் வருகிற 9ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 50 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட பள்ளி கல்வி துறையினர் செய்து வருகின்றனர்….