பாலக்காடு, ஜூன் 15: கேரளாவில் பிரபலமான குருவாயூர் கோவிலில் ஒன்றிய ரசாயனம் இணை அமைச்சர் பகவந்த் பூபா நேற்று தரிசனம் செய்தார். குருவாயூர் கோவிலுக்கு வந்த இணை அமைச்சர் பகவந்த் பூபாவை ஸ்ரீவல்சம் அரசினர் விடுதியில் குருவாயூர் தேவஸ்தான மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி விமல் உட்பட தேவஸ்தான ஊழியர்கள் பொன்னாடை அணிந்து வரவேற்பளித்தார்.
சிறிது நேரம் ஓய்வுக்குப்பின் குருவாயூர் கோவில் கொடிமரத்திற்கு அருகில் நின்று தரிசனம் செய்தார். கோவில் துணை மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பளித்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தரிசனத்திற்கு பின் அமைச்சருக்கு தேவஸ்தான பிரசாத கிட் வழங்கப்பட்டது. இதில். பாஜ தலைவர்கள் கே.கே.அனீஷ்குமார், அனில் மஞ்சரத்து ஆகியோர் உடனிருந்தனர்.