Monday, May 20, 2024
Home » கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி

by kannappan

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (51). விவசாயி. இவர், கடந்த 28ம் தேதி இரவு தனது மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மூத்த மகள் வைதேகி (24), இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் வெளியே கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு தன்னை ஏதோ கடித்ததை போல் வைதேகி உணர்ந்து, தனது தந்தையிடம் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, புதர் பகுதியில் ரவிச்சந்திரன் டார்ச் லைட் அடித்து பார்த்தார். அங்கு விஷத்தன்மை கொண்ட பாம்பு ஊர்ந்து செல்வது தெரியவந்தது. இதனால் பாம்பு கடித்த வைதேகியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வைதேகி பரிதாபமாக பலியானார். இப்புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் சோம்பட்டு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

fourteen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi