Thursday, May 16, 2024
Home » குடியரசு தினத்தையொட்டி ரத்த தானம் செய்த இளைஞர்கள்

குடியரசு தினத்தையொட்டி ரத்த தானம் செய்த இளைஞர்கள்

by Dhanush Kumar

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை, ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் சார்பில் குடியரசு தின ரத்த தான முகாம் நடந்தது. ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு பாபு தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் மருத்துவர்கள் நிரஞ்சனி, அபிநயா மற்றும் செவிலியர்கள் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு அரசு டாக்டர் வெங்கடேஷ் சான்றிதழ் வழங்கினார். முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,முத்துமுருகன், ராஜ்குமார், பூல்பாண்டி, ராஜமாணிக்கம், வழக்கறிஞர் ஜெய, உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், பேராசிரியர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

seven + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi