நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சேனைக்கிழங்கு விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல பகுதிகளில் விவசாயிகள் சேனைக்கிழங்கு பயிரிடுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை நடைபெறும் இப்பயிர் தற்போது தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி, பாப்பாங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் அறுவடை ெசய்யும் சேனைக்கிழங்குகளை வியாபாரிகள் நேரடியாக குறைந்த விலையில் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.20க்கு வியாபாரிகளால் பெறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சேனைக் கிழங்கு அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. கீல்வாதம், நீரழிவு, ெதாழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா போன்றவைகளை குணமாக்கும் சக்தி படைத்தது. சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மக்களும் அதிகளவில் விரும்பி வாங்குவார்கள். இதை நம்பி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் இருந்தும் விலை இல்லை. ஒரு வருடம் விளைய வைத்து அறுவடை செய்வதற்கு அதிக செலவு ஆகிறது. குறைந்த விலையில் கொள்முதல் ெசய்யப்படுவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றனர்….