கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்திய 30க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் சுற்றுப்பகுதியினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த 30க்கும் அதிகமான காட்டுயானைகள் நேற்றிரவு, இடம்பெயர்ந்து ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. யானைகள் வந்த நாகமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த ராகி பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.யானைகள் முகாமிட்டிருப்பதை தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறையினர், சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம், இரவு நேர விளைநில காவலுக்கு செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்….