சங்கரன்கோவில்,அக்.12: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனையின் படி தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஎம்எஸ் முகேஷ், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், வார்டு செயலாளர் வீராசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.