ஏரல், அக். 12: ஏரல் புதுமனைத் தெரு முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் நபியின் உதயதின விழாவை முன்னிட்டு அல்மதரஸ்த்துல் பீர் முஹம்மதியா அரபி பாடகசாலை மாணவ, மாணவிகளின் முதலாம் ஆண்டு பயான் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய மீலாது விழா பேரணி, புதுமனை மூன்று தெரு வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. தொடர்ந்து பயான் நிகழ்ச்சி நடந்தது. ஜமாஅத் தலைவர் உஸ்மான் அலி தலைமை வகித்தார். செயலாளர் காஸிம் முஸ்தாஅலி, காஜா நஜ்முதீன், சிறுத்தொண்டநல்லூர் இமாம் முஹம்மது இபுராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் முகம்மது நஸீம் இறைவணக்கம் ஓதினார். புதுமனைப் பள்ளி இமாம் முஹம்மது இர்ஷாத் ஆலிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்க தலைவர் பாக்கர்அலி வரவேற்றார். சூளைவாய்க்கால் பள்ளி இமாம் செய்யது சூளைவான் உலவி வாழ்த்துரை வழங்கினார். ஏரல் பெரியமணரா தெரு பள்ளி இமாம் சதக்கத்துல்லாஹ் உஸ்மானி பேசினார். மன்புல் ஹைராக் மகளிர் கல்லூரி முதல்வர் அபுல்ஹஸன் ஆலிம் உலகில் அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் நிலைத்திட பிராத்தனை செய்தார். முஹம்மதுஷிஹாப் நன்றி கூறினார். இவ்விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஏரலில் மீலாது விழா பேரணி
previous post