Saturday, May 18, 2024
Home » கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு ஆரணி அருகே கொலை செய்து வீச்சா?

கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு ஆரணி அருகே கொலை செய்து வீச்சா?

by Karthik Yash

ஆரணி, ஜன.9: ஆரணி அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது. அவரை யாராவது கொலை செய்து வீசிச்சென்றார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க பெண் சடலம் ஒன்று மிதப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆரணிக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்குவந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு வழக்குபதிவு செய்து, இறந்த பெண் யார்?, எந்த ஊர், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

six + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi