காவேரிப்பட்டணம்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்ற காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி செந்தமிழரசி பங்கேற்று, வட்டு எறிதலில் முதலிடமும், குண்டு எறிதலில் 2ம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்தார். மாணவி சரிதா 110 மீ., தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் முதலிடமும், பூவியம்மாள் 400 மீ., தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் 2ம் இடமும், உயரம் தாண்டுதலில் 3ம் இடமும் பிடித்தனர். இதன் மூலம் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் வளர்மதி, உடற்கல்வி இயக்குனர் கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் சரண்யா, மலர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.