காளையார்கோவில், ஜூன் 26: காளையார்கோவிலில் அமைந்துள்ள முத்து வடுகநாத தேவரின் 251வது குருபூஜை விழாவினை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சீமையை ஆண்ட ராணி வேலுநாச்சியாரின் கணவரும், சிவகங்கையின் இரண்டாவது மாமன்னருமாகிய முத்துவடுகநாதர் தேவர் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களிடம் காளையார்கோவிலில் போரிட்டு இதே நாளில் வீரமரணம் அடைந்தார். அவர் மரணமடைந்த தினத்தை அவரது 251வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காளையார்கோவிலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சிவகங்கை ராணி மதுராந்தக நாச்சியார், முத்து வடுகநாதரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.